கவிதை முத்து ”சமநிலைப்பாடு!”

#Poems
கவிதை முத்து  ”சமநிலைப்பாடு!”
  • உன்னை பாராட்டுகின்றனர்
    என கர்வம் கொள்ளாதே...
    நாளை உன்னை
    மதிக்காமலும் இருப்பர்!
     
  • இன்று அலட்சியம் செய்வதால்
    மனம் வெம்பி போகாதே...
    நாளை உன்னை
    பாராட்டி மெச்சுவர்!
     
  • அன்பாக இருப்பதாக
    அப்படியே நம்பி விடாதே...
    நாளை உன்னை
    வெறுத்தும் பேசுவர்!
     
  • துரோகத்தை கண்டு
    துயரம் கொள்ளாதே...
    நாளை உன்னிடம்
    மன்னிப்பு கேட்பர்!
     
  • உச்சபட்ச மகிழ்ச்சியென
    உற்சாகக் கூச்சலிடாதே...
    நாளை உனக்கதுவே
    வருத்தமாய் மாறி விடும்!
     
  • துன்பம் வந்ததென
    துவண்டு போகாதே...
    நாளை உனக்கதுவே
    வெற்றியாய் மாறி விடும்!
     
  • வசதி வந்து விட்டதென
    ஆட்டம் போடாதே...
    நாளை உனக்கு
    பணமே பாரமாகும்!
     
  • ஏழ்மையை எண்ணி நீ
    தாழ்மை உணராதே...
    நாளை நீயும்
    செல்வந்தர் ஆகிடலாம்!
     
  • இன்பமோ, துன்பமோ,
    ஏற்றமோ, தாழ்வோ,
    அன்போ, துரோகமோ,
    வசதியோ, ஏழ்மையோ
     
  • இரண்டையும்
    ஒன்றாகப் பார்!
     
  • ஒருபோதும்
    வாழ்வின் பிடித்தம்
    வற்றிப் போகாது
    உன் கையை விட்டு வெற்றி
    விட்டுப் போகாது!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!